கல்யாண மண்டபம் களேபரமாக இருக்கிறது. இன்னும் ஒரு மணிநேரத்தில் முஹூர்த்தம் சம்பந்தமான விஷயங்கள் தொடங்குவதால் மக்கள் இங்கும் அங்கும் பரபரப்பாக இருக்கிறார்கள். இளங்கோ எல்லோரையும் கடுமையாக வேலை வாங்கிக்கொண்டு இருக்கிறார்.
“யாருயா அங்கே? வாசல்ல கோலம் போட்டாச்சா? விளக்கு ஏத்தியாச்சா? அய்யர் எங்கே? தாலி எங்கே? நீங்க மாப்பிள்ளை வீட பொண்ணு வீடா?” என்று எல்லோரையும் பரபரப்பிற்குள் ஆக்குவது இவர் தான்.
“கல்யாண மண்டபத்தின் வாசலை ஒரு வீடியோ கேமரா படம் பிடித்துக்கொண்டு இருக்கிறது. இளங்கோ அந்த கேமராமேனிடம் "இங்க பாரு பக்காவா ஒன்னு விடாம சூட் பண்ணிடனும்” என்றார் இளங்கோ.
அதைக்கேட்ட கேமராமேன் செந்தில் ஆம் என்று சொல்வது போல் தலை அசைத்தார்.