தமிழ் திரையுலகில் எழுத்தாளர்களுக்கான தேவை காலாவதி ஆகி கால் நூற்றாண்டுகள் ஆகிறது. இது கற்பனை அல்ல. எனது ஏழு வருட ஆய்வுகளின் பலனாக உங்களுக்கு இதை வழங்குகிறேன்.
பல வருடங்களாக எழுத்தாளர்களின் தேவையை பற்றி பலர் பேசி வருகின்றனர். மற்ற மொழி திரைப்படங்கள் ஜெயிப்பதற்கு எழுத்தாளர்களும் ஒரு காரணம் என்று சொல்லி வருகின்றனர். ஆனால் தமிழ் திரையுலகில் மட்டும் எழுத்தாளர்கள் என்னும் தனி துறை இல்லை என்று ஆதங்கப்படுகிறார்கள். எழுத்தாளர்கள் இருந்தால் அதிக திரைப்படங்கள் வெற்றி பெரும் என்று சொல்கிறார்கள்.
முதலில் எழுத்தாளர்கள் என்றால் யார் என்று பார்க்க வேண்டும்?
·
கதை எழுதுபவர்களா?
·
திரைக்கதை எழுதுபவர்களா?
· வசனம் எழுதுபவர்களா?
எல்லோரையும் நாம் “எழுத்தாளர்கள்” என்பதால் யாரை எழுத்தாளர்கள் என்று நாம் அழைக்கிறோம் என்கிற தெளிவு வேண்டும்.

