கமல்ஹாசனின் திரைப்பயணத்தில் மரணம், மறுஜென்மம், மறுவாழ்வு மற்றும் சாகாவரத்தின் சிந்தனைகள் தொடர்ந்து கமல் ஹாசன் அவர்களின் திரைப்படங்களில் "மரணம்" பற்றி பேசப்படுகிறதே என்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா?
அவரை, அவரது ரசிகர்கள் "ஆண்டவர்" என்று அழைக்கிறார்கள் – அது ஒரு பாசப்பெயர். ஆனால் இந்த “ஆண்டவர்” என்ற உச்சியிலே நிற்கும் கலைஞரின் திரைப்பயணத்தில், மரணம் என்பது வெறும் முடிவாக அல்ல, தொடர்ச்சியாக, தாக்கமாக, மாற்றமாக, சில நேரங்களில் புனிதமாகவும் தோன்றுகிறது என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா?
பொதுவாக ஒரு கதாநாயகன் –
ஒருவராக இருந்து, ஒரு திறனை பெற்று, பிறகு வேறொரு ஆளாக மாறுகிறான் – இது திரையுலகச் சாதாரண அமைப்பு.
ஆனால் கமலின் திரைப்படங்களில், கதாநாயகன்:
- மரணம் கொடுத்த வலியால் மாறுகிறார்,
- மறுவாழ்வு பெறுகிறார்,
- மறுஜென்மம் அடைகிறார்,
- சாகாவரத்துடன் வாழ்கிறார்,
- அல்லது மரணமே கதையை நகர்த்தும் கருவியாக செயல்படுகிறது.
இது யதார்த்தமாகவே அவர் திரைப்படங்களை வேறு நிலைக்குக் கொண்டு செல்கிறது.
அந்த வரிசையை, இந்தக் கட்டுரையில், நான் ஆராய்ந்து உங்கள் முன் வைக்கிறேன்.
மரணம் என்பது முடிவா, அல்லது தொடர்ச்சியா?
விக்ரம் (2022) தக் லைப் (2025)
“நான் திரும்ப வந்துவிட்டேன்...”
இறந்ததாக அனைவரும் நம்பிய கமலின் கதாப்பாத்திரம் உயிருடன் மீண்டும் எழுகின்றான். மரணம் என்பது இங்கே ஒரு தவறான முன்னிலை.
விஸ்வரூபம் - விசாம் இன் மறு அவதாரம் விஸ்வநாத்
மனிதன் தனது பழைய முகத்தை மறைத்து, புதிய வாழ்வில் புது நோக்குடன் தொடர்கிறான். ஒரே உடலில் இரு உயிர்கள்.
மறுஜென்மம் – ஆன்மீகத்தோடு கலையையும் சேர்க்கும் நோக்கம்
தசாவதாரம் - கோவிந்தின் உள்ளத்தில் நம்பியின் பிம்பு
பல நூற்றாண்டுகளுக்கு முன் உயிர் தியாகம் செய்த நம்பியின் உணர்வுகள், கோவிந்தின் செயல்களில் வெளிப்படுகின்றன.
கால எல்லைகளை மீறும் புனர்ஜென்மக் கருத்து.
அவ்வை ஷண்முகி - பாண்டியின் மறுரூபம் – ஷண்முகி
ஒரு மனிதன், சமூகத்தில் இருக்க வேண்டிய கடமையினால் ஒரு புதிய உருவத்தை ஏற்கிறான் – பெண்ணாகவே வாழும் தீர்மானம், புனர்ஜென்மமாகவே தெரிகிறது.
மறுவாழ்வு – சாவுக்கு அப்பால் வாழும் விருப்பம்
விருமாண்டி
அன்னலட்சுமியின் அன்பே தந்த மறு வாழ்வு
அனாசக்தியான ஓர் அன்பு, ஒரு மரணதண்டனை கைதிக்கு வாழ்க்கையின் அர்த்தத்தையே மாற்றுகிறது. இரத்த வெறியிடம் இருந்து மனிதநேயத்திற்கு பயணம்.
நம்மவர் - “நான் மீண்டு வருவேன்” – உயிரில் நம்பிக்கை
கேன்சர் தாக்கியபோதும், உயிர் மீதான நம்பிக்கையை இழக்காத ஒரு மனிதனின் ஆழமான நம்பிக்கை.
வெற்றி விழா - Stephan Raj – இரண்டு வாழ்கை
ஒரே உடலில் இரண்டு வேறு நபர்களைப் போல வாழும் வாழ்வியல் வித்தியாசம். ஒரே மனிதனின் வாழ்வில் நிகழும் “மறுமுதல்”.
சாக நினைக்கும் மனம் – மரணம் தடுக்கப்படுகிறது
புன்னகை மன்னன் - சாக நினைத்தும் சாக முடியவில்லை
ஒரு காதலன் தன்னைக் கொல்ல முயற்சி செய்கிறான். ஆனால் வாழ்க்கை அவனை விடமாட்டேன் என்று பிடித்துக்கொள்கிறது. சாவை விடவும் வலிமையானது – நினைவுகள்.
குணா - “எனக்கு மட்டும் ஒன்னும் ஆகறதில்ல...”
மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவன், தன் உணர்வுகளைச் சொல்ல முடியாத நிலை. மரணம் கூட அவனை விடாமல் இருக்கிறது.
சாகாவரம் – சாகும் தருணம் கூட கலை
உத்தம வில்லன் - சாகும் தருணமும் ஒரு கலைநிகழ்ச்சி
ஒரு நடிப்புத்துறையில் வாழ்ந்த கலைஞன், தனது இறுதி நிகழ்ச்சியாக தனது சாவைவே தயாரிக்கிறார். சாவையே மேடையாக மாற்றும் கலைஞன்!
சாவை எதிர்க்கும் நாயகன்
இந்தியன் - “இந்தியனுக்கு சாவே கிடையாது”
நீதிக்காக வாழும் ஒருவன், சட்டத்தின் மரணத்தைவிட நீதி நிலைக்க வேண்டும் என்கிற விசுவாசம்.
ஆளவந்தான் - “சாவிற்கு பயப்படாதவன்”
மனநலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஒருவன், மரணத்தை அச்சமின்றி எதிர்கொள்கிறான். சாவும் பயமும் மாறுபட்டவை.
மரணமே கதையின் முரணாக, கதையை நகர்த்தும் கருவியாக - பாபநாசம், உன்னைப்போல் ஒருவன், வேட்டையாடு விளையாடு, ஹே ராம், கலைஞன், இந்திரன் சந்திரன், வெற்றி விழா, அபூர்வ சகோதரர்கள், சூரசம்ஹாரம், நாயகன், விக்ரம் (Old)
சாய் விஜேந்திரன் (Sai Vijendhiran)
திரைக்கதை ஆராய்ச்சியாளர் மற்றும் எழுத்தாளர்